செய்திகள்

ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு ஓய்வு பெறுகிறார் தெ.ஆ. வீரர் மோர்னே மோர்கெல்!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் கூறியுள்ளார்.

எழில்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கெல் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது சவாலாக உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர முடிவு செய்துள்ளேன். அடுத்து விளையாடவுள்ள ஆஸ்திரேலியத் தொடரில் வெற்றி பெற முனைப்புடன் போராடுவேன் என்று கூறியுள்ளார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்தாலும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று மோர்னே மோர்கெல் கூறியுள்ளார். 

மோர்னே மோர்கெல் இதுவரை 83 டெஸ்டுகளில் விளையாடி 294 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவில் நான்கு டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 1 அன்று ஆரம்பமாகிறது. டெஸ்ட் தொடர் நான்காவது டெஸ்டுடன் ஏப்ரல் 3 அன்று நிறைவுபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT