செய்திகள்

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு!

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மூன்று டெஸ்டுகளுக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். நேற்று நடைபெற்றுள்ள மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் புவனேஸ்வர் குமாருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை டெஸ்ட் அணியில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேபோல பூம்ரா உடற்தகுதி அடைந்தபிறகு, இரண்டாவது டெஸ்டிலிருந்து அணியுடன் கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற ரோஹித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகிறது.

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், கேஎல் ராகுல், முரளி விஜய், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரித் பூம்ரா, ஷர்துல் தாக்குர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT