செய்திகள்

தரவரிசை: கோலி சாதனை

DIN

ஒரு நாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் கோலி முதல் முறையாக 911 புள்ளிகளை எட்டி முதலாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். பந்துவீச்சாளர்களுக்கான வரிசையில் குல்தீப் யாதவ் முதல் முறையாக டாப் 10 இடங்களுக்குள் வந்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத் தொடரின் மூலமாக 2 புள்ளிகள் பெற்று 911 புள்ளிகளை எட்டினார் கோலி. அவரது இந்தப் புள்ளிகள், ரேங்கிங் வரலாற்றில் 6-ஆவது அதிகபட்சமாகும். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் 935 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் குல்தீப் யாதவ் தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக, 8 இடங்கள் முன்னேறி 6-ஆவது இடத்துக்கு வந்துள்ளார். 
பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளாக வரும் 2-ஆவது இந்தியர் குல்தீப் ஆவார்.
இங்கிலாந்து வீரர்களைப் பொருத்த வரையில், அடுத்தடுத்து சதமடித்த ஜோ ரூட் 34 புள்ளிகள் பெற்று, பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் முறையாக 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆஸம், இந்தியாவின் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் ஆகியோரைக் கடந்து இந்த இடத்தை எட்டினார் ரூட்.
இதேபோல் ஜேசன் ராய் ஓரிடம் முன்னேறி 19-ஆவது இடத்துக்கும், இயான் மோர்கன் 2 இடங்கள் முன்னேறி 22-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர். 
பந்துவீச்சாளர்களில் லியாம் பிளங்கெட் ஓரிடம் முன்னேறி 20-ஆவது இடத்துக்கு வர, மார்க் வுட் முதல் முறையாக 26-ஆவது இடத்தைப் பிடித்தார். டேவிட் வில்லி 11 இடங்கள் ஏற்றம் கண்டு 31-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் மாற்றமில்லாத நிலையில், அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து ஒரு புள்ளி பெற்று 127 புள்ளிகளோடு முதலிடத்திலும், இந்தியா ஒரு புள்ளியை இழந்து 121 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும் தொடர்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைகால கையுந்து பந்து பயிற்சி: நாளை வீரா்களுக்கான தோ்வு

கபிலா் நினைவுத் தூணுக்கு மரியாதை

ஹூக்கான் மீன்பிடி முறைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றி சிறிய விமானங்கள் பறக்கத் தடை

தண்ணீா் பந்தல் திறப்பு: பேரவை துணைத் தலைவா் பங்கேற்பு

SCROLL FOR NEXT