செய்திகள்

ஐபிஎல்-இல் நேற்று: போலார்டுக்கு அமைந்தது, யுவராஜுக்கு அமையவில்லை

ஐபிஎல்-இன் நேற்றைய போட்டியில் இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய போலார்டு அரைசதம் அடித்து ஆறுதல் அளிக்க, யுவராஜ் சிங் மீண்டும் சோபிக்கத் தவறி ஏமாற்றம் அளித்தார்.

சுவாமிநாதன்

நடப்பு ஐபிஎல் சீசனில் போலார்டுக்கு பலன் அளித்த நேற்றைய போட்டி, யுவராஜுக்கு மீண்டும் ஏமாற்றத்தையே தந்தது.

ஐபிஎல்-இன் நேற்றைய (புதன்கிழமை) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. 

பார்முக்கு திரும்பிய போலார்டு

நடப்பு சீசனில் பார்மை இழந்து தவித்து வந்த மும்பை அணியின் போலார்ட்டு 7 போட்டிகளில் 78 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். இருப்பினும் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா, டுமினிக்கு பதிலாக போலார்டுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கினார். 

இந்த சீசனில் முதலில் சொதப்பி வந்த போலார்டு ஒருவழியாக நேற்று இக்கட்டான போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் மும்பை அணிக்கு கைகொடுத்து உதவினார். 

டாஸை இழந்த மும்பை அணி நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி புயல் வேகத்தில் ரன் குவித்து வந்த அந்த அணி ஒரு கட்டத்தில் வரிசையாக 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது 6வது வீரராக களமிறங்கினார் போலார்டு.

விக்கெட்டுகளை இழந்து வந்த மும்பை அணிக்கு க்ருணால் பாண்டியாவுடன் இணைந்து நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தார். தொடர் விக்கெட்டுகளால் இறங்கிய ரன் ரேட்டை மீண்டும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக விரட்டி உயர்த்தினார். அவர் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 50 ரன்கள் குவித்தார். மும்பை அணி 186 ரன்களை எடுத்தற்கு இவருடைய பங்களிப்பு மிக அவசியம். 

புஸ்வானமாகிய யுவராஜ்

நடப்பு சீசனில் பார்மை இழந்து தவித்து வரும் மூத்த வீரர்களுள் யுவராஜ் சிங்கும் ஒருவர். இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 64 ரன்கள் மட்டுமே யுவராஜ் சிங் எடுத்திருந்தார். பஞ்சாப் அணியில் அனைத்து பேட்ஸ்மேனும் சொதப்பி வருவதால் 2, 3 போட்டிகளுக்கு ஒரு முறை அஸ்வின் வீரர்களை மாற்றிக் கொண்டு வந்தார்.

அதே யுத்தியை நேற்றும் கடைபிடித்த அஸ்வின் மயங்க் அகர்வால் மற்றும் கருண் நாயரை நீக்கிவிட்டு யுவராஜ் சிங் மற்றும் மனோஜ் திவாரிக்கு வாய்ப்பை வழங்கினார் .

ஆனால், வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பு எளிதாகிவிடும் என்ற முக்கியமான போட்டியிலும் யுவராஜ் சிங் சொதப்பினார். 187 ரன்கள் இலக்கை விரட்டி விளையாடிய பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 9 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

அப்போது தான் யுவராஜ் சிங் களமிறங்கினார். தனது அனுபவம் மற்றும் அதிரடி மூலம் பஞ்சாப்பின் வெற்றிக்கு உதவி பார்முக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து மீண்டும் சொதப்பினார். 

அதன் விளைவாக பஞ்சாப் அணி இந்த போட்டியில் 3 ரன்களில் தோல்வியடைந்தது. 

இந்த போட்டி பார்மில்லாமல் தவித்து வந்த போலார்டுக்கு கைகொடுக்க, யுவராஜுக்கு மேலும் ஒரு ஏமாற்றமாகவே அமைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT