செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ்: இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-கோரிக் மோதல்

தினமணி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-போர்னோ கோரிக் ஆகியோர் மோதுகின்றனர்.
 சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
 உலகின் மூன்றாம் நிலை வீரர் ஜோகோவிச்சும், நான்காம் நிலை வீரர் அலெக்சாண்டர் வெரேவும் மோதினர். இதில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் வென்று இறுதிக்கு தகுதி பெற்றார்.
 நடப்பாண்டில் விம்பிள்டன், யுஎஸ் ஓபன் சின்சினாட்டி ஓபன் போட்டிகளில் ஜோகோவிச் வென்று அபார பார்மில் உள்ளார்.
 பெடரர் அதிர்ச்சி: மற்றொரு அரையிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் ரோஜர் பெடரரும்-குரோஷியாவின் போர்னோ கோரிக்கும் மோதினர். இதில் 21 வயது வீரர் கோரிக் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பெடரரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார். நடப்பாண்டில் பெடரர் ஆஸி. ஓபன் போட்டியில் மட்டுமே வென்றார். யுஎஸ் ஓபனில் நாக் அவுட், விம்பிள்டனில் காலிறுதியோடு வெளியேறினார் பெடரர்.
 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-கோரிக் மோதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT