செய்திகள்

பாக். கிரிக்கெட் தொடர் காலவரையறை இன்றி ஒத்திவைப்பு: இலங்கை கிரிக்கெட் அறிவிப்பு

ANI

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை காலவரையறை இன்றி ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

முன்னதாக, இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் காரணமாக 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் தொடர்பான அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனால் இலங்கை முழுவதும் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், தொடர் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் எதிரொலியாக பாகிஸ்தானுடனான யு-19 தொடரை உடனடியாக காலவரையறை இன்றி ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம், சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

இலங்கை சுற்றுப்பயணம் செய்யவிருந்த பாகிஸ்தான் யு-19 அணி, இலங்கை யு-19 அணியுடன் 4 நாள் ஆட்டம் இரண்டிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT