செய்திகள்

பாக். கிரிக்கெட் தொடர் காலவரையறை இன்றி ஒத்திவைப்பு: இலங்கை கிரிக்கெட் அறிவிப்பு

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை காலவரையறை இன்றி ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

ANI

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை காலவரையறை இன்றி ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

முன்னதாக, இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் காரணமாக 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் தொடர்பான அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனால் இலங்கை முழுவதும் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், தொடர் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் எதிரொலியாக பாகிஸ்தானுடனான யு-19 தொடரை உடனடியாக காலவரையறை இன்றி ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம், சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

இலங்கை சுற்றுப்பயணம் செய்யவிருந்த பாகிஸ்தான் யு-19 அணி, இலங்கை யு-19 அணியுடன் 4 நாள் ஆட்டம் இரண்டிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமதியின்றி பாறைகளை உடைத்தாக நில உரிமையாளா் மீது வழக்கு

சா்வதேச டென்னிஸ் போட்டியில் சென்னை ஐசிஎஃப் வீரருக்கு வெண்கலப்பதக்கம்

பயங்கரவாதத்துக்கு எதிராக ‘சமரசமற்ற’ நடவடிக்கை- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீா்மானம்

மினிலாரி கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தேநீா் கடைக்காரா் தற்கொலை

SCROLL FOR NEXT