செய்திகள்

கோலி உட்பட டாப் -3 காலி: மே.இ. தீவுகளுக்கு எதிராக இந்தியா திணறல் பேட்டிங்

DIN


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. 

மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். 

கீமர் ரோச் சிறப்பாக பந்துவீச அகர்வால் மற்றும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ஆகியோர் முறையே 5 மற்றும் 2 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 2 பவுண்டரிகள் அடித்த நிலையில் 9 ரன்களுக்கு கேப்ரியல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், இந்திய அணி 25 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இந்திய அணியை இந்த சரிவில் இருந்து மீட்க தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் மற்றும் அஜின்கியா ரஹானே போராடி வருகின்றனர். சற்றுமுன் வரை, இந்திய அணி 21 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ராகுல் 31 ரன்களுடனும், ரஹானே 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT