முகப்பு
செய்திகள்

பந்துகளைச் சரியாகக் கூட்ட மறந்த நடுவர்: 7-வது பந்தில் ஆட்டமிழந்த பேட்ஸ்மேன்!

விதிமுறைப்படி கள நடுவர் பந்துகளைத் தவறாகக் கூட்டினாலும் அதில் 3-வது நடுவர் தலையிடக்கூடாது என்பதால்...

Updated On : 14 ஜனவரி 2019, 2:51 pm IST
பகிர்:

டி20 ஆட்டத்தில் கூடுதலாக ஒரு பந்து கிடைத்தால் எந்த ஓர் அணியும் பேட்ஸ்மேனும் மகிழத்தான் செய்வார்கள்.

ஆனால் தவறாக வழங்கப்பட்ட அந்தக் கூடுதலான பந்தில் பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தால்?

இப்படியொரு சம்பவம் பிக் பாஷ் டி20 போட்டியில் நிகழ்ந்துள்ளது. பெர்த்தில் நேற்று சிட்னி சிக்ஸர்ஸ், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய சிட்னி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பெர்த் அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்த இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. 

Advertisement

Advertisement

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் நடுவர் செய்த ஒரு தவறு நல்லவேளையாக பெரிய பாதிப்பை பெர்த் அணிக்கு ஏற்படுத்தவில்லை. பெர்த் தொடக்க வீரரான மைக்கேல் கிளிங்கர், 2-வது ஓவரின் கடைசிப் பந்தில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அது அந்த ஓவரில் வீசப்பட்ட 7-வது பந்து.

அந்த ஓவரில் பந்துகளை கள நடுவர் சரியாகக் கூட்டாததால் துரதிர்ஷ்டவசமாக 7-வது பந்தில் ஆட்டமிழந்தார் கிளிங்கர். ஆனால் விக்கெட் கீப்பர் பிடித்த அவருடைய கேட்ச் குறித்து 3-வது நடுவரிடம் ஆலோசனை கோரப்பட்டது. அப்போதுதான் பலரும் அது 7-வது பந்து என்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆனாலும் விதிமுறைப்படி கள நடுவர் பந்துகளைத் தவறாகக் கூட்டினாலும் அதில் 3-வது நடுவர் தலையிடக்கூடாது என்பதால் கேட்ச்சின் தன்மையை மட்டும் ஆராய்ந்துத் தீர்ப்பளித்தார் 3-வது நடுவர். இதனால் கூடுதலாக, தவறாக வீசப்பட்ட பந்தில் கிளிங்கர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை அளித்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, விசாரணை நடத்தி தவறுகளைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. 

எனினும் இதுபோன்ற தவறுகளை மூன்றாவது நடுவரைக் கொண்டு சரிசெய்யவேண்டும், இதுபோன்ற தவறுகளை அனுமதிக்கக் கூடாது என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments