முகப்பு
செய்திகள்

தோனி இனி ஒருமுனையில் ஆட்டத்தைக் கட்டுப்படுத்துவார்: சச்சின் நம்பிக்கை

ஒருமுனையில் இருந்து ஆட்டத்தின் போக்கை தோனி இனி கட்டுப்படுத்துவார் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். 

Updated On : 16 ஜனவரி, 2019 at 8:37 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 12:23 PM

ஒருமுனையில் இருந்து ஆட்டத்தின் போக்கை தோனி இனி கட்டுப்படுத்துவார் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

முதல் ஒருநாள் போட்டியில் தோனி சிறிது இறுக்கத்துடன் காணப்பட்டார். நினைத்த இடத்தில் அவரால் பந்துகளை அடிக்க முடியவில்லை. இது கிரிக்கெட்டில் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் இயல்பான ஒன்று தான். ஆனால், 2-ஆவது ஒருநாள் போட்டியில் மாற்றுச் சிந்தனையுடன் களமிறங்கினார். முதல் பந்தில் இருந்தே அவர் வேறு வீரராக வெளிப்பட்டார்.

தற்போது வயதாகியுள்ள தோனி, நடுவரிசையில் களமிறங்கி நங்கூரமாக ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றுள்ளார். மேலும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதிலும் எப்போதும் போல் வல்லவராகத் திகழ்கிறார். 

Advertisement

களமிறங்கியவுடன் சில பந்துகளை தடுப்பாட்டம் ஆடி, விக்கெட்டின் போக்கையும், பந்துவீச்சாளர்களின் திட்டங்களையும் கணித்துக்கொள்வார். அதைத்தான் இந்தப் போட்டியிலும் சிறப்பாக செய்தார். எனவே இனிவரும் காலங்களில் ஒருமுனையில் இருந்து ஆட்டத்தின் போக்கை தோனி கட்டுப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர், தனது 100 எம்பி ஆப்-பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.