முகப்பு
செய்திகள்

தோனியின் கோரிக்கைக்கு ராணுவத் தளபதி அனுமதி

ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் தோனி கலந்துகொள்ள உள்ளார்.

Updated On : 22 ஜூலை, 2019 at 11:39 AM
பகிர்:

கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ராணுவம் (டெரிட்டோரியல் ஆர்மி) பாராசூட் ரெஜிமெண்ட் உடன் 2 மாதங்கள் தங்கி பணிபுரியப் போவதாக பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தார். எனவே மே.இ.தீவுகளுடன் நடைபெறவுள்ள தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றார்.

இந்நிலையில், தோனியின் கோரிக்கையை ஏற்று ராணுவத் தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் தோனி கலந்துகொள்ள உள்ளார். இருப்பினும் பாதுகாப்புத்துறையில் கௌரவப் பதவியில் இருப்பதால் களத்தில் நடைபெறும் செயல்பாடுகளில் தோனி பங்கேற்க அனுமதியில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.