செய்திகள்

விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டார்: சௌரவ் கங்குலி

Raghavendran

தமிழக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்தார். இதுதொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் புவனேஸ்வர் காயமடைந்தது இந்தியாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. விளையாட்டில் காயங்கள் சாதாரணமானது. ஷிகர் தவனும் விரைவில் குணமடைவார் என நம்புகிறேன். 

விஜய் சங்கர் சிறப்பாக செயல்பட்டு தனக்கு கிடைத்த வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்திக்கொண்டார். புவனேஸ்வர் குமார் இல்லாத வெற்றிடத்தை சரியாக பூர்த்தி செய்தார். தற்போதைய இந்திய அணி மிகச்சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளது. எனவே நாம் அரையிறுதிக்கு முன்னேறுவது இயல்பான ஒன்றுதான்.

நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் ஆட்டங்கள் சிறப்பாக உள்ளன. எனவே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் இந்தியா எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT