முகப்பு
செய்திகள்

பரம வைரிகள் இன்று மோதல்: முதல் வெற்றியை பெறுமா இங்கிலாந்து?

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 

Updated On : 25 ஜூன், 2019 at 9:57 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:50 PM

2019 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பரம வைரிகளாக இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இந்தப் போட்டி மிக முக்கியமானதாகும். எனவே இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நடப்பு தொடரில் பலம் வாய்ந்த அணியாக விளங்கி வரும் இங்கிலாந்து, தனது சொந்த மண்ணில் விளையாடி வருவது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இருப்பினும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத இலங்கையிடம் தோற்றது இங்கிலாந்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

மறுபுறம் ஆஸ்திரேலிய வீரர்களும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், வங்கதேசத்துடனான போட்டி அவர்களுக்கும் கடும் சவாலாக அமைந்தது.

Advertisement

போட்டியை நடத்தும் இங்கிலாந்து 6 ஆட்டங்களில் 4 வெற்றிகளைப் பெற்றது. பாகிஸ்தானுடனும், இலங்கையுடனும் தோல்வியுற்று பட்டியலில் 8 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் ஆஸி. 6 ஆட்டஙகளில் 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.

கடந்த 1992 உலகக் கோப்பையில் இருந்து தற்போது வரையிலான உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தியதில்லை. எனவே அதனை இம்முறை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவுடனான கடந்த 10 ஒருநாள் போட்டிகளில் 9-ல் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.