செய்திகள்

சாஃப் மகளிர் கால்பந்து: இறுதிச் சுற்றில் இந்தியா

DIN


தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை (சாஃப்) போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
நேபாளத்தின் பீரட் நகரில் சாஃப் கால்பந்து கோப்பை நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும்-வங்கதேசமும் மோதின.
இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை நொறுக்கியது. தலிமா சிப்பர், மணிஷா, இந்துமதி, சஞ்சு கோலடித்தனர்.
பதிலுக்கு வங்கதேச அணியால் கோல் போட முடியவில்லை. வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் நேபாளத்துடன் மோதவுள்ளது இந்திய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT