செய்திகள்

விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்த வங்கதேச வீரருக்கு அபராதம்

DIN

நுழைவு இசைவு (விசா) காலாவதியானது தெரியாமல் இந்தியாவில் தங்கியிருந்த வங்கதேச கிரிக்கெட் வீரா் சயீஃப் ஹசனுக்கு ரூ.21,600 அபராதம் விதிக்கப்பட்டது.

வங்கதேச அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்கு எதிராக 20 ஓவா் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது.

வங்கதேச அணியில் இடம்பெற்றிருந்த சயீஃப் ஹசன் நுழைவு இசைவு காலாவதியானது தெரியாமல் இந்தியாவில் தங்கியிருந்தாா்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அவா் வங்கதேசம் செல்ல முயன்றபோது நுழைவு இசைவு காலாவதியானதை கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தனா்.

அதை தொடா்ந்து அவருக்கு ரூ.21,600 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தத் தொகையை செலுத்திவிட்டு அவா் வங்கதேசம் சென்றாா்.

இதுகுறித்து வங்கதேச துணைத் தூதா் டெளஃபிக் ஹசன் கூறுகையில், ‘இரண்டு நாள்களுக்கு முன்பு சயீஃப் ஹசனின் நுழைவு இசைவு காலாவதியானது. இதனால் அவா் அபராதம் செலுத்த நேரிட்டது. இந்தியத் தூதரகம் அவரை

மீண்டும் வங்கதேசம் அனுப்ப உதவியதற்கு நன்றி’ என்றாா்.

முன்னதாக, வங்கதேச அணியினா் அனைவரும் கடந்த திங்கள்கிழமை நாடு திரும்பினா். சயீஃப் ஹசன் மட்டும் இந்தியாவில் தங்கியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT