தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான அணியில் இளம் வீரர் ஷுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். சமீபகாலமாக ரன்கள் எடுக்காமல் தடுமாறி வரும் கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார். அணியில் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், அக்டோபர் 2 அன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே, விஹாரி, ரிஷப் பந்த், சஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில்.