செய்திகள்

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் மோடி பாராட்டு

DIN

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டத்தை 22-ஆவது முறையாக கைப்பற்றிய இந்திய வீரர் பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மியான்மரின் மண்டாலே நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் போட்டியில் பங்கஜ் அத்வானி 6-2 என்ற புள்ளிக்கணக்கில் உள்ளூர் வீரர் நே தவே ஓவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது: உங்களுக்கு எனது வாழ்த்துகள், நாடே உங்கள் சாதனையால் பெருமைபடுகிறது. மேலும் எதிர்காலத்தில் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் என மோடி பாராட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT