செய்திகள்

நாங்கள் இந்தியர்கள், ஹிந்தியில் தான் பேசுவோம்: ரோஹித் சர்மா பிடிவாதம்!

எழில்


நாங்கள் இந்தியர்கள் என்பதால் ஹிந்தியில் தான் பேசுவோம் என ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிக்கை வைத்த ரசிகர்களின் கோரிக்கையை நிராகரித்தார் பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா.

கரோனா அச்சுறுத்தலாலும் ஊரடங்கு உத்தரவாலும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வில் உள்ளார்கள். இதனால் பிரபல கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மாவும் பும்ராவும் நேற்று இன்ஸ்டகிராம் வழியாக ரசிகர்களிடம் உரையாடினார்கள்.

ரோஹித் சர்மாவும் பும்ராவும் ஒருவருக்கொருவர் ஹிந்தியில் பேசிக்கொண்டார்கள். அப்போது ஆங்கிலத்தில் பேசுமாறு ரசிகர்கள் இருவரிடமும் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ரோஹித் சர்மாவும் பும்ராவும் ரசிகர்களின் கோரிக்கையை நிராகரித்தார்கள்.

ஆங்கிலத்தில் பேசுமாறு அவர்கள் கூறுகிறார்கள். முடியாது. நாங்கள் இந்தியர்கள். ஹிந்தியில் தான் பேசுவோம். தொலைக்காட்சிப் பேட்டிகளில் நான் ஆங்கிலத்தில் பேசுவேன். தற்போது நான் வீட்டில் இருக்கிறேன் என்றார் ரோஹித் சர்மா.

பும்ராவும் ரோஹித் சர்மாவின் கருத்தை ஏற்றுக்கொண்டார். நாம் ஆங்கிலத்தில் பேசினால் ஹிந்தியில் பேசச்சொல்கிறார்கள். ஹிந்தியில் பேசினால் ஆங்கிலத்தில் பேசச் சொல்கிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT