செய்திகள்

சேவாக்கை விடவும் திறமையான வீரர், ஆனால் மூளை கிடையாது: பாகிஸ்தான் வீரர் பற்றி சோயிப் அக்தர்

DIN

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இம்ரான் நாசிர், சேவாக்கை விடவும் திறமையானவர், ஆனால் மூளை கிடையாது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர்.

தொலைக்காட்சிப் பேட்டியில் அக்தர் கூறியதாவது:

சேவாக்கிடம் உள்ள மூளை இம்ரான் நாசிரிடம் இல்லை என நினைக்கிறேன். அதேபோல இம்ரான் நாசிரிடம் உள்ள ஆட்டத்திறன் சேவாக்கிடம் இல்லை என்றும் நினைக்கிறேன். நாசிரை பாகிஸ்தான் சரியாகப் பயன்படுத்திகொள்ளவில்லை. அப்படிப் பயன்படுத்தியிருந்தால் சேவாக்கை விடவும் திறமையான வீரர் கிடைத்திருப்பார்.

இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக சதம் அடித்தார் நாசிர். இதையடுத்து நாசிரைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றேன். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் கேட்கவில்லை.

நம் வீரர்களின் திறமையை நம்மால் பயன்படுத்திக்கொள்ளத் தெரியவில்லை. அப்படிச் செய்திருந்தால் சேவாக்கை விடவும் திறமையான வீரர் நமக்குக் கிடைத்திருப்பார். எல்லா ஷாட்களும் அவரிடம் உண்டு, நல்ல ஃபீல்டரும் கூட. அவரைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

நாசிர் 8 டெஸ்டுகள், 79 ஒருநாள், 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT