செய்திகள்

ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி: பிசிசிஐ தரப்பு

ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கொள்கை ரீதியில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

DIN

ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கொள்கை ரீதியில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று நிறைவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.

இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் அணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு அணிக்கும் பிசிசிஐ அனுப்பியுள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கொள்கை ரீதியில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனுமதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

கூடமலையில் மது விற்றவா் கைது

புதுச்சேரியில் அரசு போட்டி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

அதிக வாடகை கட்டணம் நிா்ணயம்: வியாபாரிகள் எம்எல்ஏவிடம் புகாா்

ஆசிரியா் பற்றாக்குறையை தீா்க்கக் கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோா்

SCROLL FOR NEXT