செய்திகள்

நான் ஏன் கிரீஸில் பாய்ந்து விழவில்லை: உலகக் கோப்பை ரன் அவுட் குறித்து இப்போதும் வருந்தும் தோனி!

அப்போது நான் ஏன் கிரீஸில் பாய்ந்து விழவில்லை என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன்...

எழில்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, போட்டியிலிருந்து வெளியேறியது.

10 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்கிற நிலையில் இந்திய அணி இருந்தபோது 50 ரன்களில் இருந்த தோனி ரன் அவுட் ஆனார். சில அங்குல இடைவெளியில் தோனி ரன் அவுட் ஆனது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவேளை தோனி ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இந்திய அணி அரையிறுதியில் வென்றிருக்கவும் வாய்ப்பிருந்தது. 

இந்நிலையில் பேட்டியொன்றில் இந்த ஆட்டம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் தோனி. அவர் கூறியதாவது:

முதல் ஆட்டத்திலும் இந்த ஆட்டத்திலும் ரன் அவுட் ஆனேன். அப்போது நான் ஏன் கிரீஸில் பாய்ந்து விழவில்லை என்று எனக்கு நானே கேட்டுக்கொள்கிறேன். அந்த இரு அங்குல வித்தியாசம், நான் பாய்ந்து விழுந்திருக்க வேண்டும் என்று இப்போதும் சொல்ல வைக்கிறது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT