ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளார் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். அவர் கூறியதாவது:
உலகக் கோப்பையில் நன்றாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி, தன்னம்பிக்கையுடன் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களும் நன்றாக அமைந்துள்ளன. எனினும் கடந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோற்றதால் இந்திய அணி ஜெயிக்கப் போராடும். ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 3-2 என வென்றது ஆஸ்திரேலிய அணி.