செய்திகள்

தோனியின் திட்டங்களை அப்படியே பின்பற்றினால் போதும்: ரிஷப் பந்த்

DIN

பேட்டிங்கில் தன்னுடைய சிறந்த இணை தோனி தான் என இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

தில்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணியுடனான இணைய உரையாடலில் ரிஷப் பந்த் கூறியதாவது:

பேட்டிங்கில் என்னுடைய சிறந்த இணை தோனி தான். ஆனால் அவருடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு அடிக்கடி கிடைப்பதில்லை. அவர் ஆடுகளத்தில் இருந்தால் எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும். தன்னுடைய திட்டங்களை நம்மிடம் கூறுவார். அதை அப்படியே பின்பற்றினால் போதும். இலக்கை விரட்டும் போது அவர் மூளை அபாரமாக வேலை செய்யும். 

விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதும் நன்றாக இருக்கும். இவர்களைப் போன்ற மூத்த வீரர்களுடன் விளையாடும்போது வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அவர்களுடைய எண்ண ஓட்டம் எப்படி உள்ளது எனக் கவனிக்கலாம். இது ஒரு தனி உணர்வு என்றார். 

22 வயது பந்த் இதுவரை 13 டெஸ்டுகள், 16 ஒருநாள், 28 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT