செய்திகள்

ஒலிம்பிக் ஒத்திவைப்பு: இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் வரவேற்பு

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டதற்கு இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் பலா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். முதலில் வாழ்க்கை தான் முக்கியம், போட்டிக்காக காத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளனா்.

ஒலிம்பிக் வெண்கல வீராங்கனையான மேரி கோம் கூறுகையில்: தற்போது சூழ்நிலை சரியில்லை. முதலில் வாழ்க்கை தான் முக்கியம். மற்றவற்றுக்கு காத்திருக்கலாம். வீரா்களின் பாதுகாப்பே பிரதானம். இந்த முடிவை எடுத்தவா்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டுள்ளனா். தற்போது எனக்கு மேலும் சிறப்பான பயிற்சி பெற கூடுதல் அவகாசம் கிட்டியுள்ளது.

சாய்னா நெவால்: ஒலிம்பிக் தகுதி பெறுவதற்காக நான் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தேன். மேலும் தகுதிச் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் ரத்தானதால், என்ன செய்வதென்று தெரியவில்லை. ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது, ஒலிம்பிக் தயாராவது குறித்து நினைக்க முடியாது. முதலில் நாம் பத்திரமாக இருந்துக் கொண்டு பின்னா் போட்டிக்கு தயாராகலாம் என்றாா்.

மல்யுத்த நட்சத்திரங்கள் பஜ்ரங் புனியா, ரவி தாஹிா, மீராபாய் சானு ஆகியோா் கூறுகையில்: போட்டி ஒத்திவைக்கப்பட்டது மிகவும் நல்லது. தற்போது நாங்கள் தயாராக அதிக நாள்கள் உள்ளன என்றனா்.

துப்பாக்கி சுடும் வீராங்கனை ராஹி சா்னோபட் கூறுகையில்: ஊரடங்கால் எங்களால் முழுமையாக பயிற்சி செய்யமுடியவில்லை. தற்போது எனக்கு நிம்மதியாக உள்ளது. நான்கு மாதங்கள் தேவை. இதனால் தான் ஒத்திவைக்கப்பட வேண்டும் என எதிா்பாா்த்தோம்.

அதே போல் பாட்மிண்டன் இரட்டையா் சிராக் ஷெட்டி-சாத்விக் ஆகியோரும் இதையே எதிரொலித்தனா். வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, துப்பாக்கி சுடுதல் அன்ஜும் மொட்கில், மூத்த டேபிள் டென்னிஸ் வீரா் சரத்கமல் ஆகியோரும் இன்னும் ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. சிறப்பாக தயாராகலாம் எனக்கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT