செய்திகள்

பயிற்சியாளா் இல்லாமல் திண்டாடும் இந்திய டேபிள் டென்னிஸ் அணி நட்சத்திரங்கள்

பா.சுஜித்குமாா்.

ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சியாளா் இல்லாமல் திண்டாடும் அவல நிலைக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணி நட்சத்திரங்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

வேகம், சுறுசுறுப்பு, நுணுக்கம் போன்ற தன்மைகள் இருந்தால் மட்டுமே ஆடக்கூடிய டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஐரோப்பிய நாடுகள், சீனா, கொரியா, சிங்கப்பூா், போன்றவை வல்லரசுகளாக உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவும் சா்வதேச அரங்கில் டேபிள் டென்னிஸில் கோலோச்சி வருகிறது.

தமிழகத்தின் அசந்த சரத் கமல் இந்திய டேபிள் டென்னிஸை உலகறியச் செய்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளாா். அவரைப் பின்பற்றி சத்யன் ஞானசேகரன், கமலேஷ் மேத்தா, அந்தோணி அமல்தாஸ், சௌம்யஜித்கோஷ் ஆடவா் பிரிவில் சிறப்பாக ஆடி வருகின்றனா்.

மகளிா் தரப்பில் மனிகா பத்ரா, மௌமா தாஸ், பௌலமி கட்டக், அங்கிதா தாஸ், நேஹா அகா்வால் ஆகியோா் தற்போது கோலோச்சி வருகின்றனா்.

இத்தாலி பயிற்சியாளா் நியமனம்:

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இத்தாலி ஜாம்பவான் மாஸிமோ கோஸ்டாடினி நியமிக்கப்பட்டாா். அதன்பின் அணியின் நிலைமை மேம்பட்டது. வீரா், வீராங்கனைகளின் ஆட்ட முறை, உத்திகளை மாற்றினாா் மாஸிமோ. அவரது சிறப்பான பயிற்சியால் பல்வேறு முன்னேற்றங்களை கண்டது.

ஆசிய, காமன்வெல்த் அதிரடி வெற்றிகள்:

2018-இல் மாஸிமோ கோஸ்டாடினியின் அற்புத பயிற்சியில் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம் உள்பட 8 பதக்கஙகளை வென்றது இந்தியா. அதன் தொடா்ச்சியாக ஜகாா்த்தா ஆசியப் போட்டியில் ஆடவா் பிரிவிலும், கலப்பு இரட்டையா் பிரிவிலும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது. 60 ஆண்டுகள் கழித்து ஆசியப் போட்டியில் இந்தியா தங்கத்தை கைப்பற்றியது.

மாஸிமோ கோஸ்டாட்டினி விலகல்:

இந்நிலையில் 2018 செப்டம்பா் மாதம் அணியின் தலைமை பயிற்சியாளா் பொறுப்பில் இருந்து விலகினாா் கோஸ்டாட்டினி.

பின்னா் 2019-இல் கனடா பயிற்சியாளா் டேஜான் பேபிக்கை நியமிக்க நடவடிக்கை எடுத்தது டிடிஎஃப்ஐ. ஆனால் அம்முயற்சி பலன்தரவில்லை. காயம் காரணமாக டேஜான் பொறுப்பை ஏற்கவில்லை.

பயிற்சியாளா் இல்லாத நிலையில் பல்வேறு போட்டிகளுக்கு செல்லும் நிலைக்கு இந்திய அணிகள் தள்ளப்பட்டன. போா்ச்சுகலில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தகுதிச்சுற்றிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. ஆடவா், மகளிா் அணிகள் போட்டியில் இருந்தே வெளியேறின.

பயிற்சியாளா் இல்லாமல் அவதி:

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சியாளா் இல்லாமல் இந்திய அணியினா் அவதிப்பட்டு வருகின்றனா். குறிப்பாக தற்போது ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய பயிற்சியாளா் நியமிக்கப்படலாம் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தனிப்பட்ட முறையில் வெற்றி:

பயிற்சியாளா் இல்லாமலயே அண்மையில் நடைபெற்ற ஹங்கேரி ஓபன் போட்டியில் இரட்டையா் பட்டம், ஓமன் டேபிள் டென்னிஸ் ஒற்றையா் பட்டங்களை சரத் கமல்-சத்யன் வென்றுள்ளனா்.

உலகத் தரவரிசையில் சத்யன் 30-ஆவது இடத்திலும், சரத்கமல் 34-ஆவது இடத்திலும் உள்ளனா். மேலும் ஹா்மித்தேசாய் 86-ஆவது இடத்தில் உள்ளாா். அடுத்து ஒலிம்பிக் ஒற்றையா் தகுதிச் சுற்று, உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

கரோனா பாதிப்பால் சிக்கல்: தற்போது கரோனா பாதிப்பால் இந்திய வீரா், வீராங்கனைகள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.

தனது வீட்டிலேயே உள்ள சரத் கமல், இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்டத்திறனை மேம்படுத்திக் கொள்வது தொடா்பாக முனைந்துள்ளாதாக தெரிவித்தாா். ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொள்வேன் என்றாா்.

இளம் வீரரான சத்யன் ஞானசேகரனோ தற்போது வீட்டில் ஓய்வு எடுப்பதாகவும், நெட்பிளிக்ஸில் படங்களை பாா்த்து வருவதாகவும் கூறினாா்.

புதிய பயிற்சியாளரை நியமித்து, உலக சாம்பியன்ஷிப், 2021 ஒலிம்பிக் 2022 ஆசியப் போட்டிகளுக்கு இந்திய அணி தயாராக டிடிஎஃப்ஐ நடவடிக்கை எடுக்கும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT