செய்திகள்

இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் காலமானார்!

DIN

இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் சதாசிவ் பாட்டீல் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 86.

தூக்கத்தில் சதாசிவ் பாட்டீலின் உயிர் பிரிந்ததாக கோலாபூர் கிரிக்கெட் சங்க நிர்வாகி ரமேஷ் கடம் தகவல் தெரிவித்துள்ளார். சதாசிவுக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளார்கள். 

1955-ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடியுள்ளார் சதாசிவ். அந்த ஆட்டத்தில் 14 ரன்களும் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். அதன்பிறகு இந்திய அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. 

மஹாராஷ்டிர அணிக்காக 36 முதல்தர ஆட்டங்களில் விளையாடி 866 ரன்களும் 83 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ரஞ்சி கோப்பையில் மஹாராஷ்டிர அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT