செய்திகள்

பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ள ஃபெடரர் முடிவு

இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ள ரோஜர் ஃபெடரர் முடிவெடுத்துள்ளார்.

DIN

இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலந்துகொள்ள ரோஜர் ஃபெடரர் முடிவெடுத்துள்ளார்.

ஆடவர் டென்னிஸில் 20 கிராண்ட்ஸ்லாம்களுடன் முன்னணி வீரராக உள்ளார் 39 வயது ரோஜர் ஃபெடரர். கடந்த வருட ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் ஃபெடரர் தோல்வியடைந்தார்.

காயம் காரணமாக 2020-ல் நடைபெறவுள்ள டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஃபெடரர் கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். கடந்த வருடம் அவருக்கு இரு அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றன.

இந்நிலையில் இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக ஃபெடரர் அறிவித்துள்ளார். 

பிரெஞ்சு ஓபன் போட்டி, மே 30 அன்று தொடங்கவுள்ளது. 

பிரெஞ்சு ஓபன் போட்டியில் கடைசியாக 2019-ல் விளையாடிய ஃபெடரர், அரையிறுதியில் நடாலிடம் தோல்வியடைந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனாவின் மேலும் ஒரு பொறியியல் அதிசயம்: உலகின் உயரமான பாலம்..!

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு போராடும்: மு.க. ஸ்டாலின்

நிரந்தர ஒளி... கேப்ரியல்லா!

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 3 குவாஹாட்டி பல்கைக்கழக பேராசிரியா்கள்!

SCROLL FOR NEXT