முகப்பு
செய்திகள்

பரபரப்பாக முடிந்த டெஸ்ட்: 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய மே.இ. தீவுகள் அணி

ரோச் 30, சீல்ஸ் 2 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் மே.இ. தீவுகள் அணி வெற்றியைப் பரிசாக அளித்தார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் பரபரப்பான முறையில் 1 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 4 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது பாகிஸ்தான் அணி. கிங்ஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக,  89.4 ஓவா்களில் 253 ரன்களுடன் முடிவுக்கு வந்தது மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இன்னிங்ஸ். பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் டெஸ்டில் வெற்றி பெற மே.இ. தீவுகள் அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் சிறப்பாகப் பந்துவீசியதால் 151 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது மே.இ. தீவுகள் அணி. இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற பரபரப்பு ஏற்பட்டது. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கெமர் ரோச்சும் சீல்ஸும் நிலைமையைச் சமாளித்து ஆட்டமிழக்காமல் மே.இ. தீவுகள் அணிக்கு மறக்க முடியாத ஓர் வெற்றியை அளித்தார்கள். மே.இ. தீவுகள் அணி, 56.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது. ரோச் 30, சீல்ஸ் 2 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் மே.இ. தீவுகள் அணி வெற்றியைப் பரிசாக அளித்தார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →