நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. மழை காரணமாக ஆட்டம் மதியம் 12 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ் நிகழ்வு 11.30 மணிக்கு நடைபெற்றது.
காயம் காரணமாக ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா என முதல் டெஸ்டில் விளையாடிய மூன்று வீரர்கள் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அவர்களுக்குப் பதிலாக விராட் கோலி, சிராஜ், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் மும்பை டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக டாம் லேதம் கேப்டனாகச் செயல்படவுள்ளார். நியூசி. அணியில் மிட்செல் இடம்பெற்றுள்ளார்.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இன்று 78 ஓவர்கள் வீசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா-நியூஸிலாந்து: இன்று தொடங்குகிறது மும்பை டெஸ்ட்
இந்திய அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்துக்குச் சிக்கலா?: விராட் கோலி பதில்
37 ஆண்டுகளாக பூப்பந்து வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படவில்லை: சு. வெங்கடேசன் எம்.பி.
விஸ்வரூபம் எடுக்கும் பெங் ஷுவாய் விவகாரம்: சீனாவில் டென்னிஸ் போட்டிகளை ரத்து செய்த டபிள்யூடிஏ
ஐபிஎல்: 40 மடங்கு சம்பள உயர்வு பெற்ற இளம் வீரர்
ஐபிஎல்: முதல்முறையாகக் குறைந்த மேக்ஸ்வெல் சம்பளம்