செய்திகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்

DIN


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் 'பஞ்சாப் கிங்ஸ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8 அணிகளுள் கிங்ஸ் லெவன் பஞ்சாபும் ஒன்று. 13 ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை இறுதி  ஆட்டம் வரை சென்றது. மற்றொரு முறை 3-வது இடத்தைப் பிடித்தது. கடந்த ஐபிஎல் சீசனின் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி 6-வது இடத்தைப் பிடித்தது.

14-வது ஐபிஎல் சீசன் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்த நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் 'பஞ்சாப் கிங்ஸ்' என மாற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவலறிந்த பிசிசிஐ வட்டாரம் கூறியது:

"நீண்ட நாள்களாகப் பெயரை மாற்ற அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு முன் பெயரை மாற்ற நினைத்தனர். எனவே, இது திடீர் முடிவல்ல." 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT