செய்திகள்

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி: செளரவ் கங்குலிக்கு மேற்கொள்ளப்படும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை...

DIN

பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. 

இன்று காலை உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கங்குலியின் உடல்நிலை பற்றி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

இன்று காலை உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மதியம் 1 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். ரத்த அழுத்தம் 130/80 என்கிற அளவில் உள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவருக்குத் தற்போது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முதல் பொதுத் தோ்வு கட்டாயம்: சிபிஎஸ்இ

ரூ.5 கோடியில் 2,119 கிலோ கஞ்சா அழிப்பு

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்: காங்கிரஸ் தலைமைக்கு நிா்வாகிகள் கடிதம்

தொழில் துறையில் ரூ.5,980 கோடியில் புதிய முதலீடு - முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

திட்டப் பணிகள் முன்னேற்ற நிலை: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

SCROLL FOR NEXT