ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிலிருந்து முக்கிய வீரர்கள் விடுவிப்பு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிலிருந்து ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, கிறிஸ் மாரிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிலிருந்து ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, கிறிஸ் மாரிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் அணிகள் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த வரிசையில் பெங்களூருவிலிருந்து பிஞ்ச், மாரிஸ் போன்ற முக்கிய வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கேப்டன் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், யுஸ்வேந்திர சஹால் உள்ளிட்ட வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
ஆரோன் பிஞ்ச், குர்கீரத் மான், கிறிஸ் மாரிஸ், ஷிவம் துபே, மொயீன் அலி, டேல் ஸ்டெயின், பார்த்திவ் படேல் (ஓய்வு), இசுரு உடானா, உமேஷ் யாதவ் மற்றும் பவன் நெகி.