செய்திகள்

ஒருநாள் தொடரை வென்ற இங்கிலாந்து: 5 விக்கெட்டுகள் எடுத்த சாம் கரண் (ஹைலைட்ஸ் விடியோ)

DIN

இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. தனஞ்ஜெயா டி சில்வா 91 ரன்களும் தசுன் ஷனகா 47 ரன்களும் எடுத்தார்கள். சாம் கரண் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். டேவிட் வில்லி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. ஜேசன் ராய் 60 ரன்கள் எடுத்தார். ஜோ ரூட் 68, கேப்டன் மார்கன் 75 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. 

இந்த வெற்றியினால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து அணி. 3-வது ஒருநாள் ஆட்டம் ஜூலை 4 அன்று நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT