டன்க்லே அரைசதம்: இந்திய மகளிருக்கு நெருக்கடி
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீராங்கனை சோபியா டன்க்லே அரைசதம் அடித்து நெருக்கடியளித்து வருகிறார்.
செய்திகள்டன்க்லே அரைசதம்: இந்திய மகளிருக்கு நெருக்கடி
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீராங்கனை சோபியா டன்க்லே அரைசதம் அடித்து நெருக்கடியளித்து வருகிறார்.
இந்திய மகளிருக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீராங்கனை சோபியா டன்க்லே அரைசதம் அடித்து நெருக்கடியளித்து வருகிறார்.
இந்திய மகளிர், இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டெஸ்ட் ஆட்டம் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. டன்க்லே 12 ரன்களுடனும், கேத்ரின் பிரண்ட் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரண்ட் 8 ரன்களுக்கு ஜுலான் கோஸ்வாமியிடம் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, டன்க்லேவுடன் சோபி எக்லெஸ்டோன் இணைந்தார். இந்த இணை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியளித்தது. எக்லெஸ்டோன் நிதானம் காட்ட டன்க்லே ரன்களைக் குவித்து வந்தார்.
8-வது விக்கெட்டுக்கு இந்த இணை 56 ரன்கள் சேர்த்த நிலையில் எக்லெஸ்டோன் 17 ரன்களுக்கு தீப்தி சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். எனினும், அடுத்து களமிறங்கிய அன்யா ஷ்ருப்சோலும் ரன் குவிக்க மீண்டும் ஒரு பாட்னர்ஷிப் அமைந்தது.
2-ம் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது.
அரைசதம் அடித்த டன்க்ளே 66 ரன்களுடனும் ஷ்ருப்சோல் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.