செய்திகள்

என்னவாகும் சாய்னா நெவாலின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கனவு?: மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி ஒத்திவைப்பு

DIN

கரோனா பாதிப்பு காரணமாக மலேசிய ஓபன் சூப்பர் 750 பாட்மிண்டன் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோலா லம்பூரில் நடைபெற இருந்த மலேசிய ஓபன் சூப்பர் 750 போட்டி, கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மலேசிய ஓபன் போட்டி மே 25 முதல் 30 வரை நடைபெற இருந்தது. இந்தப் போட்டி ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிப் போட்டியாகவும் இருந்தது. 

தில்லியில் நடைபெற இருந்த இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என அறியப்படுகிறது. 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதிபெறுவதற்காக எஞ்சியிருந்த 3 போட்டிகளில் தற்போது 2 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, ஜூன் 1 முதல் 6 வரை சிங்கப்பூர் ஓபன் போட்டி நடைபெறவுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு சிங்கப்பூர் தடை விதித்துள்ளது. இந்தச் சூழல், ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான முயற்சியில் உள்ள சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகிய இந்தியர்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. 

பி.வி. சிந்து, சாய் பிரணீத், ஆடவர் இரட்டையர்கள் சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் ஆகிய இந்திய பாட்மிண்டன் வீரர்கள் ஏற்கெனவே ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT