டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணிக்குப் புதிய துணை கேப்டன்
இங்கிலாந்து அணியின் புதிய துணை கேப்டனாக மொயீன் அலி தேர்வாகியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் புதிய துணை கேப்டனாக மொயீன் அலி தேர்வாகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்த பட்லரின் மனைவிக்கு 2-வது குழந்தை விரைவில் பிறக்கவுள்ளது. இதனால் 4-வது டெஸ்டிலிருந்து பட்லர் விலகியுள்ளார். கடைசி டெஸ்டில் அவர் பங்கேற்பது குறித்த தகவலும் உறுதியாகவில்லை.
இதையடுத்து 4-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியின் புதிய துணை கேப்டனாக மொயீன் அலி தேர்வாகியுள்ளார்.
34 வயது மொயீன் அலி, இங்கிலாந்து அணிக்காக 63 டெஸ்டுகளில் விளையாடி 2879 ரன்களும் 193 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.