செய்திகள்

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய டெஸ்ட் அணியில் புதிய வீரர் சேர்ப்பு

DIN

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் மாற்று வீரராக இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா இத்தொடரின் ஆரம்பம் முதல் இந்திய அணியினருடன் பயணித்து வருகிறார். அணி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT