செய்திகள்

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியது ஏன்?: கிறிஸ் வோக்ஸ் விளக்கம்

DIN


டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளதால் ஐபிஎல்-லில் இருந்து விலகியுள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ்,  ஆர்ச்சர் ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து ஏற்கெனவே விலகிவிட்டார்கள். கடந்த வார இறுதியில் ஜானி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ்), கிறிஸ் வோக்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), ஜாஸ் பட்லர், டேவிட் மலான் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகிய இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டிக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் என நான்கு மாதங்களுக்குத் தொடர்ச்சியாக விளையாடி, கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்து இவர்கள் விலகியுள்ளதாக அறியப்படுகிறது. கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் பென் டுவார்சிஸைத் தேர்வு செய்துள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி. 

இந்நிலையில் ஐபிஎல் 2021 போட்டியில் விலகியதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் கிறிஸ் வோக்ஸ் கூறியதாவது:

சில மாதங்களுக்கு முன்பு, டி20 உலகக் கோப்பை அணியில் நான் இடம்பெறுவேன் என எனக்குத் தெரியாது. ஐபிஎல் போட்டியின் அட்டவணை மாற்றப்பட்டது. டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் போட்டி என அடுத்தடுத்து முக்கியமான போட்டிகள் இருப்பதால் குறைந்த நாள்களில் நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும். ஐபிஎல் போட்டியில் விளையாட வேண்டும் என்று எனக்கும் விருப்பம் தான். ஆனால் ஏதாவது ஒரு போட்டியிலிருந்து விலகவேண்டிய நிலைமையில் உள்ளேன் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT