செய்திகள்

அணியில் மீண்டும் ஷ்ரேயஸ் இணைந்திருப்பது பெரிய பலம்: கைஃப்

DIN


14-வது ஐபிஎல் சீசனின் 2-வது பகுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது பெரிய பலமாக இருக்கும் என அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் கைஃப் கூறியது:

"முதல் பாதி ஐபிஎல்-க்குப் பிறகு பெரிய இடைவேளை இருக்கிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான வீரர்கள் தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். முதல் பாதியில் விளையாடிய அணியிலிருந்து நிறைய மாற்றங்கள் இல்லை. எனினும், அணியில் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்திருப்பது எங்களுக்குப் பெரிய பலம். அவர் சிறந்த வீரர். கடந்த 2 சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த சீசனில் களமிறங்குவதை எதிர்நோக்கி இருக்கிறேன்."

இந்தியாவில் நடைபெற்ற 14-வது ஐபிஎல் சீசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதன் 2-ம் பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வரும் 22-ம் தேதி எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT