செய்திகள்

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸி. 

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்தியா ஆஸ்திரேலியா  அணிகள் தேர்வாகியுள்ளது. 

DIN

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்தியா ஆஸ்திரேலியா  அணிகள் தேர்வாகியுள்ளது. 

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக டி20 முறையில் மகளிா் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியா உள்பட 8 அணிகள் இதில் ஆடுகின்றன. 5 முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பாா்படோஸ் அணிகளுடன் ஏ பிரிவில் இந்தியா விளையாடியது.

முதல் அரையிறுதிப் போடியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா- ஆஸி. அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. 

இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு எட்ஜ்பாட்ஸனில் நடைபெறுகிறது. இப்போட்டியை சோனி தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கொடைக்கானலில் உணவக உரிமையாளா் கைது

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

SCROLL FOR NEXT