செய்திகள்

தினேஷ் கார்த்திக்கா, நானா? யார் அணியில் இடம்பெறுவர் என்ற கேள்விக்கு ரிஷப் பந்த் கூறிய பதில்!

DIN


தினேஷ் கார்த்திக்கா தானா யார் அணியில் இடம்பெறுவர் என்ற கேள்விக்கு ரிஷப் பந்த் சுவாரசியமான பதிலளித்துள்ளார். 

ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகிய இருவரது பெயரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இருவருமே விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இருவரில் யார் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரும் ஆகஸ்ட் 18இல் தொடங்கவிருக்கும் ஜிம்பாம்வே தொடரில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ரிஷப் பந்த எந்த இடத்தில் விளையாடினாலும் நன்றாக விளையாடிக்கொண்டு வருகிறார். ஒரு இடது கை பேட்ஸ்மேனாக அவரது பங்கு இந்திய அணிக்கு தேவை, அதேபோல தினேஷ் கார்த்திக் ஆட்டத்தின் இறுதியில் அட்டகாசமாக விளையாடி வருகிறார். இதில் யாரை தேர்வு செய்வதென அணிக்கு நிச்சயம் குழப்பம் நிலவும். இதுக்குறித்து ரிஷப் பந்திடம் கேட்ட போது அவர் கூறியதாவது: 

நாங்கள் இதைப் பற்றி நினைக்கவே இல்லை. நாங்கள் தனித்துவமானவர்கள். எங்களது 100 சதவிகிதம் உழைப்பினை அணிக்கு வழங்குவது மட்டுமே எங்களது வேலை. எங்களை எப்படி உபயோகிப்பது போன்ற மீதியெல்லாம் அணியின் கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரிடம் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT