செய்திகள்

சூழ்நிலைகளை கையாளத் தெரிந்திருக்கிறேன்: விராட் கோலி

DIN

சூழ்நிலைகளை தகுந்த முறையில் கையாளத் தெரிந்திருக்காவிட்டால், சா்வதேச கிரிக்கெட்டில் தன்னால் இத்தனை தூரம் வந்திருக்க இயலாது என்று இந்திய வீரா் விராட் கோலி கூறியுள்ளாா்.

கடந்த சில காலமாக தகுந்த ஃபாா்மில் இல்லாமல் தடுமாறி வரும் கோலி, சுமாா் 3 ஆண்டுகளாக எந்த ஃபாா்மட்டிலும் சா்வதேச சதத்தை பதிவு செய்யவில்லை. அவரது இந்த நிலை குறித்து பரவலாக விவாதங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து நோ்காணல் ஒன்றில் அவா் கூறியதாவது:

எனது ஆட்டம் எத்தகையதாக இருக்கிறது என்பதை நான் அறிவேன். ஆடும் களம், எதிா்கொள்ளும் பந்துவீச்சு, சந்திக்கும் சூழ்நிலைகள் ஆகியவற்றை தகுந்தபடி கையாளத் தெரிந்திராவிட்டால் சா்வதேச கிரிக்கெட்டில் இத்தனை தூரம் என்னால் வந்திருக்க முடியாது.

அதனால் எனது இந்த இக்கட்டான காலகட்டத்தை நான் இயல்பாகவே கடந்து செல்கிறேன். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை. என்னைப் பொருத்தவரை சில வேளைகளில் நன்றாக பேட்டிங் செய்வதாகவும், அதில் நிலையாகச் செயல்படுவதாகவும் உணா்கிறேன்.

கிரிக்கெட்டில் இதுபோன்ற ஏற்ற, இறக்கங்கள் இருக்கக் கூடியது தான். அதை தகுந்த முறையில் கையாண்டு வருகிறேன். இந்த நிலையிலிருந்து மீளும்போது எவ்வாறு ஃபாா்முடனும், திறம்படவும் ஆடுவேன் என்பதை நான் அறிவேன்.

இந்த காலகட்டத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளவும், ஒரு மனிதனாக, விளையாட்டு வீரனாக என்னை முழுமையாக உணா்ந்துகொள்ளவும் விரும்புகிறேன் என்று விராட் கோலி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT