செய்திகள்

ச்சோ ஸ்வீட்: மைக்கை ஐஸ்கிரீமாக எண்ணிய மொராக்கோ வீரரின் மகன்! (விடியோ)

DIN

கத்தார் உலகக் கோப்பைப் போட்டிக்கு அரையிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்த மொராக்கோ அணி, அரையிறுதியில் 0-2 என பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. கால்பந்து உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க நாடு என்கிற பெருமையை அடைந்தது மொராக்கோ.

இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பிறகு மொராக்கோ கோல் கீப்பர் யசின் பனோ, தனது மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு பேட்டியளித்தார். தனக்கு அருகில் இருந்த மைக்கைப் பார்த்த பனோவின் மகன், அதை ஐஸ்கிரீம் என எண்ணி, நாக்கை நீட்டி மைக்கைச் சாப்பிட முயன்றான். சிரித்துக்கொண்டே மகனின் செயலை ரசித்தார் பனோ. இதன்பிறகு இன்னொருமுறையும் நாக்கை நீட்டியபடி மைக்கை சாப்பிட மகன் முயல, அப்போது தன் மகனுக்கு அவன் செய்த தவறைச் சுட்டிக்காட்டினார் பனோ. சமூகவலைத்தளத்தில் இந்தக் காணொளியைப் பகிர்ந்துள்ளது ஃபிஃபா.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT