செய்திகள்

புரோ கபடி: இன்று இறுதி ஆட்டம்

புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - புணேரி பல்தான் அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன

DIN

புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - புணேரி பல்தான் அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. அகமதாபாதில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம், ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் அலைவரிசையில் நேரலை ஆகிறது.

இந்த இரு அணிகளில், ஜெய்ப்பூா் அணி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதற்கான முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் புணே(ரி) அணி முதல் முறையாக சாம்பியனாவதற்கு முயற்சிக்கிறது.

இந்த சீசனில் மொத்தம் நடைபெற்ற 22 லீக் ஆட்டங்களின் முடிவில் ஜெய்ப்பூா் 15 வெற்றியுடன் முதலிடமும், புணே 14 வெற்றியுடன் 2-ஆம் இடமும் பிடித்திருந்தன. பின்னா் அரையிறுதி ஆட்டத்தில் புணே அணி - தமிழ் தலைவாஸையும், ஜெய்ப்பூா் அணி - பெங்களூரு புல்ஸையும் வென்று இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாசலிலே பூசணிப் பூ.. மார்கழி கோலத்தில் வைக்கும் பூ, தை மாத திருமணத்துக்கான அச்சாணியா?

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

SCROLL FOR NEXT