செய்திகள்

புரோ கபடி: இன்று இறுதி ஆட்டம்

புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - புணேரி பல்தான் அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன

DIN

புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - புணேரி பல்தான் அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. அகமதாபாதில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம், ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் அலைவரிசையில் நேரலை ஆகிறது.

இந்த இரு அணிகளில், ஜெய்ப்பூா் அணி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதற்கான முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் புணே(ரி) அணி முதல் முறையாக சாம்பியனாவதற்கு முயற்சிக்கிறது.

இந்த சீசனில் மொத்தம் நடைபெற்ற 22 லீக் ஆட்டங்களின் முடிவில் ஜெய்ப்பூா் 15 வெற்றியுடன் முதலிடமும், புணே 14 வெற்றியுடன் 2-ஆம் இடமும் பிடித்திருந்தன. பின்னா் அரையிறுதி ஆட்டத்தில் புணே அணி - தமிழ் தலைவாஸையும், ஜெய்ப்பூா் அணி - பெங்களூரு புல்ஸையும் வென்று இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT