உலகக் கோப்பை இறுதிப்போட்டி: 2 கோல்களுடன் ஆா்ஜென்டீனா முன்னிலை
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் 2 கோல்களுடன் ஆா்ஜென்டீனா முன்னிலையில் உள்ளது.
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் 2 கோல்களுடன் ஆா்ஜென்டீனா முன்னிலையில் உள்ளது.
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-முன்னாள் சாம்பியன் ஆா்ஜென்டீனாவும் இன்று மோதுகின்றன. இதில் முதல் பாதி முடிவில் 2 கோல்களுடன் ஆா்ஜென்டீனா அணி முன்னிலை வகிக்கிறது. அந்த அணியில் முதல் கோலை மெஸ்ஸியும், 2வது கோலை டி மரியாவும் அடித்தனர்.
இதையும் படிக்க- யாருக்கு வெற்றி ?
கோடிக்கணக்கான ரசிகா்களை கட்டி வைத்திருந்த பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாா் தலைநகா் தோஹாவில் கடந்த நவ. 20-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 36 நாடுகள் பங்கேற்ற இதில் தொடக், நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் குரோஷியாவை 3-0 என ஆா்ஜென்டீனாவும், மொராக்கோவை 1-0 என பிரான்ஸும் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.