செய்திகள்

உலகக் கோப்பை வெற்றி: ஆர்ஜென்டீனாவில் இன்று பொது விடுமுறை!

உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆர்ஜென்டீனா நாட்டில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

DIN

உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆர்ஜென்டீனா நாட்டில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வென்றுள்ளது. இறுதிச்சுற்றில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து சாம்பியன் ஆனது. கூடுதல் நேரத்துக்குப் பிறகு இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. 

1978, 1986-க்குப் பிறகு ஆர்ஜென்டீனா அணி வென்ற 3-வது உலகக் கோப்பை இது. மெஸ்ஸி முதல்முறையாக உலகக் கோப்பையை ஏந்திய தருணமும் இம்முறைதான் அமைந்தது. 1962-க்குப் பிறகு அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை வென்ற அணி என்கிற பெருமையைப் பெறுவதற்காக பிரான்ஸ் கடுமையாக முயன்றது. இறுதியில் பெனால்டியில் தோற்றுப் போனது. உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஹாட்ரிக் கோல்களை அடித்த 2-வது வீரர் என்கிற பெருமையை அடைந்தார் பிரான்ஸின் எம்பாப்பே. பரிசளிப்பு விழாவில் தங்கக் காலணி விருது எம்பாப்பேவுக்கு வழங்கப்பட்டது. போட்டியின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.

இந்நிலையில் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஆர்ஜென்டீனா நாட்டில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் காலை வேளையில் சொந்த நாட்டுக்குத் திரும்பிய ஆர்ஜென்டீனா வீரர்கள், பியூனஸ் ஏர்ஸில் உள்ள நினைவுக்கூடத்தின் அருகே ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

SCROLL FOR NEXT