புரோ கபடி லீக் போட்டியில் தபங் தில்லி - பெங்களூரு புல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய ஆட்டம் 36-36 என்ற புள்ளிகள் கணக்கில் ‘டை’ ஆனது.
தில்லி இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில் 3-ஆவது முறையாக ‘டை’ செய்திருக்க, 18 ஆட்டங்களில் ஆடியிருக்கும் பெங்களூருவுக்கு இது 2-ஆவது ‘டை’ ஆகும். இந்த ஆட்டத்தின் முடிவில் தில்லி 57 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பெங்களூரு 54 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும் இருந்தன.
இந்த ஆட்டத்தில் தில்லிக்கு 21 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள் கிடைக்க, பெங்களூருக்கு 21 ரெய்டு புள்ளிகள், 9 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 2 கூடுதல் புள்ளிகள் கிடைத்தன.