செய்திகள்

இலங்கை கிரிக்கெட் தொடர் அட்டவணை மாற்றம்: பிசிசிஐ

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்கள் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

DIN


இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர்கள் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன்பிறகு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2021-23 பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடுகிறது.

இந்த நிலையில் தொடர்களின் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதுபற்றிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"முதல் டி20 ஆட்டம் லக்னௌவில் நடைபெறும். அடுத்த இரண்டு டி20 ஆட்டங்கள் தரம்சலாவில் நடைபெறும். முதல் டெஸ்ட் ஆட்டம் மார்ச் 4 முதல் மார்ச் 8 வரை மொகாலியில் நடைபெறவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் மார்ச் 12 முதல் 16 வரை நடைபெறவுள்ளது."

முன்னதாக, முதல் டெஸ்ட் ஆட்டம் பெங்களூருவில் பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கவிருந்தது. டி20 ஆட்டம் மார்ச் 13-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT