கோப்புப்படம் 
செய்திகள்

உலகக் கோப்பையில் ஹர்மன்பிரீத் துணை கேப்டன்: மிதாலி ராஜ்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கௌர்தான் இந்திய அணியின் துணை கேப்டன் என கேப்டன் மிதாலி ராஜ் இன்று (சனிக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளார்.

DIN


மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கௌர்தான் இந்திய அணியின் துணை கேப்டன் என கேப்டன் மிதாலி ராஜ் இன்று (சனிக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி இரண்டு மகளிர் ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியின் துணை கேப்டனாக தீப்தி சர்மா நியமிக்கப்பட்டார். ஹர்மன்பிரீத் கௌர் 4-வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவில்லை. எனினும், 5-வது ஆட்டத்துக்குத் திரும்பியபோது தீப்தி சர்மாவே துணை கேப்டனாக செயல்பட்டார். இதனால், துணை கேப்டன் குறித்த குழப்பம் எழுந்தது.

இந்த நிலையில் கேப்டன் மிதாலி ராஜ் காணொலி வாயிலாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

"கடைசி இரண்டு ஒருநாள் ஆட்டங்களுக்கு தீப்தி சர்மா துணை கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டது தேர்வுக் குழுவினர் மற்றும் பிசிசிஐ முடிவு. உலகக் கோப்பைக்கு ஹர்மன்பிரீத் கௌர் துணை கேப்டன்."

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 6-ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X தளத்தில் Comment Off “கருத்து சுதந்திரம் பற்றி திருமா பேசுகிறார்!” அண்ணாமலை விமர்சனம்

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT