கோப்புப்படம் 
செய்திகள்

ஹெல்மட்டை தாக்கிய பந்து: ஸ்மிருதி மந்தனா பாதியில் வெளியேற்றம்

தென் ஆப்பிரிக்காவுடனான மகளிர் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஹெல்மட்டில் பந்து தாக்கியதையடுத்து, அவர் பாதியில் வெளியேறினார்.

DIN


தென் ஆப்பிரிக்காவுடனான மகளிர் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஹெல்மட்டில் பந்து தாக்கியதையடுத்து, அவர் பாதியில் வெளியேறினார்.

மகளிர் உலகக் கோப்பை முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ஐசிசி தளத்தில் வெளியான தகவலின்படி, ஆட்டத்தின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் வீசிய பவுன்சர் பந்து மந்தனாவைத் தாக்கியுள்ளது.

இதையடுத்து, அணியின் மருத்துவர் அவரைப் பரிசோதித்ததில் விளையாடுவதற்கு அவர் தகுதியாக இருப்பதாகவே முடிவெடுக்கப்பட்டது. ஆனால், 9 பந்துகளுக்குப் பிறகு மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. இதன்பிறகே, அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறியுள்ளார்.  
  
மருத்துவர் அதிகாரிபடி, அவருக்கு கன்கஷனுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் களத்திலிருந்து வெளியேறியிருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கின் தொடக்கத்தில் அவர் பீல்டிங் செய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

SCROLL FOR NEXT