செய்திகள்

புதிய அணி, பழைய பெயர்: லக்னௌ ஐபிஎல் அணியின் பெயர் வெளியீடு

DIN


ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள லக்னௌ நகரத்தை அடிப்படையாகக் கொண்ட அணிக்கு சூப்பர் ஜெயன்ட்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னௌ மற்றும் ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் லக்னௌ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, ஏலத்துக்கு முன்பாக இருஅணிகளும் தேர்வு செய்த வீரர்கள் பட்டியல் கடந்த சனிக்கிழமை வெளியானது.

இதில் லக்னௌ அணி கேஎல் ராகுல் (ரூ. 17 கோடி), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ரூ. 9.2 கோடி) மற்றும் ரவி பிஷ்னாய் (ரூ. 4 கோடி) ஆகியோரைத் தேர்வு செய்துள்ளது.

இந்த நிலையில், சூப்பர் ஜெயன்ட்ஸ் என அணிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஐபிஎல் 2016, 2017 ஆகிய சீசன்களில் பங்கேற்றபோது இந்த நிறுவனம் புனே அணிக்கு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் எனப் பெயர் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT